அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லவும் .!!!

Wednesday, December 30, 2009

"இளவரசி டயானா"


உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!

பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...





லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.


வெளியே...பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!


‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...


‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’என்று கூட்டம் திமிற...ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.


தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின. அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.






டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!


எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!


டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.


தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.



அரச குடும்பத்தின் மருமகளாகிவிட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாகவெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.


மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.


அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.


மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்





திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.







கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.


தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.


அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.




குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.


தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.




இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.


மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.




டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.


சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.


டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.


அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.






டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.


பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.


அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.


பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!

































Wednesday, December 9, 2009

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் !!!


வீட்டின் ஒரே ஆண் பிள்ளை. பதினோரு வயது தான். தலைவனை இழந்த குடும்பத்தை தாங்கும் வயதா அது? இப்படி ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்துவதே எவ்வளவு பெரிய சாதனை? ஆம் நாம் எல்லாம் அதிகம் கேட்ட பெயர் , இசை உலகின் ஒரு நட்சத்திரம் தமிழகத்தின் சென்னை மாநகரத்தில் 1966-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் ஏ.எஸ்.திலிப்குமார்.இவரது தந்தை ஏ.கே சேகர் கெரளத்தே சினிமா என்ற மலையாளபடத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய இவர் உடல் நல குறைவால் உயிரிழந்தார். தனது 9 வயதிலேயே தந்தையை இழந்தவர் தனது குடும்பத்தை சுமக்கும் பொறுப்பை மேற்கொண்டார்...



சிறுவயதிலேயே தந்தையை இழந்த பிறகு, திலீப்புக்குத் துணையாக வாய்த்தது வறுமைதான். உழைத்தால்தான் அடுத்தவேளை உணவு என்ற சூழலில் அவருக்குக் கைகொடுத்தது சிறுவயதில் தந்தையிடமிருந்து கற்க ஆரம்பித்த இசை. திலீப்பை வளர்த்தது. ஆதரவளித்தது. ஆளாக்கியது. ஏ.ஆர். ரஹ்மானாக அடையாளமும் பெற்றுத் தந்தது.

தந்தை இறந்த பிறகு, ஸ்டூடியோ ஸ்டூடியோவாக வேலைக்கு சென்றதால், திலீப்பால் பள்ளிக்கு ஒழுங்காக செல்ல முடியவில்லை. பள்ளி நிர்வாகம், அவரின் அம்மாவிடம் பையன் ஒழுங்காக பள்ளிக்கு வருவதை கவனிக்க சொன்னார்கள். குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கும் செல்லவேண்டும். பிறகு, பள்ளிக்கும் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வது? அடுத்த நாள், ஸ்டூடியோவில் இருந்து நேரடியாக பள்ளிக்கு வர சொன்னார் அவரின் அம்மா. அங்கு வாசலில் காத்திருந்த அவர், திலீப்பிற்கு அங்கேயே உடை மாற்றி, உணவளித்து பள்ளிக்கு உள்ளே அனுப்பி வைத்தார்.







ரஹ்மானுக்கு இசையை தவிர வேறு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. ஒரு நேரத்தில், எதிர்காலத்தின் மீது பயமேற்பட்டு, இசைத்துறையில் வேலையில்லாமல் போனால் என்ன செய்வது என்று ஒரு கட்டத்தில் திகைத்து போய், கார் ஓட்ட கற்றுக்கொண்டாராம். சினிமாவில் பிரச்சினை ஆகிவிட்டால், டிரைவர் ஆகி விடலாம் என்று நினைத்திருக்கிறார்!

1975 இல் வெளிவந்த ‘பென்படா’ என்கிற மலையாளப் படத்தில் வரும் ‘வெள்ளித்தேன் கிண்ணம் போல்’ என்ற பாடல். இந்த படத்திற்கு இசை, அவரின் தந்தை ஆர்.கே.சேகர். பாடல் ரெகார்டிங்கின் போது, ஒன்பது வயது திலீப் விளையாட்டாக ஹார்மோனியத்தில் ஏதோ வாசித்துக்காட்ட, அது அங்கிருந்த எல்லோருக்கும் பிடித்துவிட, அந்த மெட்டே பாடலாகியது. அப்புறம், இன்னொரு விஷயம். ரஹ்மான் தந்தை இசையமைத்த முதல் படத்தின் பெயர் - பழசிராஜா.






தனது தந்தையிடம் இருந்து கிபோர்டு வாசிக்கும் கலையை கற்ற இவர் தனது பால்யபருவ நன்பர்களான சுவாமி, ஜோஜோ மற்றும் ராஜா ஆகியோருடன் சேர்ந்து நெமோசிஸ் என்ற இசைக்குழுவை ஆரம்பித்து அந்த குழுவில் பியானோ, கித்தார், மற்றும் கீபோர்டு வாசித்துவந்தார். பல இசை அமைப்பாளர்களை உருவாக்கிய தனராஜ் மாஸ்டரிடம் இவர் இசையை பற்றி மேலும் பல நுணுக்கங்களை கற்றுகொண்டார். தனது 11 வயதிலேயே ராகதேவன் இளையராஜாவின் குழுவில் இணைந்து கீ போர்ட் பிளேயராக பணியாற்றினார்..

ஒரு நிறுவனத்தில் பணிபுறிந்த அவர் விளம்பர படங்களின் இசை அமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடிவந்தது. விளம்பர படம் என்று சலிக்காமல் தனது திறமையை வெளிகொண்டுவந்து பல விளம்பரதாரர்களின் நிறந்தர இசையமைப்பாளர் ஆனார்.




எந்த சினிமாவையும் வேலை நேரத்தில் விரும்பி பார்க்காத ரஹ்மான், ஏதோ தோன்றி, ஒரு நண்பருடன் ப்ரிவ்யூ சென்று பார்த்த படம் - தளபதி. இளையராஜா-மணிரத்னம் கூட்டணியின் கடைசி படம். படம் முடிந்த பிறகு, வழக்கத்திற்கு மாறாக, கொஞ்சம் அதிக நேரம் ரஹ்மானுடன் மணிரத்னம் பேசியிருக்கிறார்... இவரது திறமையைகண்டு தனது ரோஜா என்ற படத்திற்கு இசை அமைக்க அழைப்பு விடுத்தார். இந்த படம் வெளியானதும் முழு இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார். இந்த படம் இந்தி மலையாளம் தெலுங்கு என இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியானது.

தனது முதல்படத்திலேயே சிறந்த இசைஅமைப்பளாருக்கான தேசிய விருது வென்றவருக்கு அதன் பிறகு விருதுகளின் மழை பெழிய ஆரம்பித்துவிட்டது. 1992-ல் வெளியான இந்த படத்தை தொடந்து வந்த சங்கரின் ஜெண்டில்மேன் (1993) படமும் தமிழக அரசின் சிறந்த இசை அமைப்பளர் விருதை தேடித்தந்தது. அதனை அடுத்து காதலன் (1994), பாம்பே(1995),இந்தியன்(1996), மின்சாரகனவு (1997),ஜீன்ஸ்(1998), சங்கமம்(1999),கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்(2000),முதல்வர் (2001),கண்ணத்தில் முத்தமிட்டால்(2002),கண்களால் கைதுசெய்(2003),ஆயுத எழுத்து(2004).அன்பே ஆருயிரே(2005), சில்லுனு ஒருகாதல் (2006),சிவாஜி (த பாஸ்) (2007), என தமிழில் தனது விருதுகளை வாங்கி குவிக்க ஹிந்தியிலும் இவரின் இசையில் வெளிவந்த படங்கள் விருதுகளை வாங்கி குவித்தன.


ரோஜாவின் முலம் இந்தியில் அறிமுகமானாலும் 1995-ல் வெளிவந்த ரங்கீலா படத்தின் மூலம் இந்தி திரைஉலகின் பாட்ஷாவானார், அதன் பிறகு வெளிவந்த அனைத்துபடங்களும் அவார்டை வாங்கி கொடுத்தது. திலி சே, தால், புகார், லாகான்(ஆஸ்கார்டுக்கு அணுப்பபட்டது) த லீசன்ட் ஆப் பகத்சிங், ஸ்வதேஷ்,ரங்தே பசந்தி, குரு, ஜோதா அக்பர்,கஜனி(ஹிந்தி) என இந்தியில் இவரது இசையில் வெளிவந்த அனைத்து படங்களும் விருதுகளை வாங்கிதந்தது.இசைதான் எது மாதிரியும் இல்லாமல் புதுமாதிரி இசை. ரஹ்மானின் அடிப்படை ஃபார்முலா இதுவே. தனக்குக் கிடைத்த விளம்பரப் பட வாய்ப்புகளில் அதைத்தான் செய்தார். ரோஜாவில் திரை திறந்தது. அதன் பின் அசுர வளர்ச்சி. இளவயதிலேயே இமாலய சாதனைகள். இசைக்கு ரஹ்மான் என்றால் படத்தின் பாதி வெற்றி உறுதி. படம் வியாபாரமாகிவிடும். ஆக, இன்று பெரிய இயக்குநர்கள் எல்லாம் ரஹ்மானுக்காகக் காத்திருந்து படம் எடுக்கிறார்கள். குண்டுச் சட்டிக்குள்ளேயே ஓடாமல், பாலிவுட், ஹாலிவுட் என்று எல்லைகள் தாண்டி இயங்கி, உலகின் செவிகளை தன் வசப்படுத்த ரஹ்மான் செய்த முயற்சிகள் பிரமிப்பானவை.


இந்திய இசையமைப்பாளர்கள் அனைவரையும் டிஜிட்டல் இசை நோக்கி செல்ல வைத்தான். உலக இசையை இந்தியா கொண்டு வந்தான். இந்திய இசையை உலகமெங்கும் கொண்டு சென்றான். தமிழகமும் இந்தியாவும் வருட வருடம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஆஸ்கரை, இதோ கை நிறைய வாங்கி கொண்டு வந்தார்….


2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்

Tuesday, November 24, 2009

Tuesday, October 20, 2009

கல்பனா சாவ்லா நம்பிக்கை !!!


"இந்தியாவில் பிறந்து விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி இவரே".

இந்தியாவைச் சேர்ந்த ஹரியானாவில் கர்னல் என்ற ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார்.

இந்தியாவின் தலைச்சிறந்த விமான ஓட்டியும் தொழிலதிபருமான திரு.ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்து அவருக்கு பறப்பதில் ஆர்வம் ஏற்பட்டது .

கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார் கல்பனா சாவ்லா தனது கல்வியை கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் துவங்கினார்.


கல்பனாவின் விண்வெளிக் கனவை அங்கீகரிக்க, பாராட்ட அவள் தோழிகளோ! குடும்பமோ முன்வரவில்லை. மாறாக கேலியும் கிண்டலும் தான் பரிசாக்க் கிடைத்தது. காரணம், அப்பொழுது 1970களில் நம் நாட்டில் இருந்த அறிவியல் வளர்ச்சி மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் நிலையில் இல்லை. ஏன் இன்னும் அது கனவாகவே உள்ளது. அப்படி எந்த ஒரு வாய்ப்பும் கண்ணுக்கு தெரியாத சூழ்நிலையிலும்…. தன்னால் விண்வெளிக்கு செல்ல முடியும் என்று உறுதியா, திடமாக நம்பினார் கல்பனா…


கல்பனாவின் திட்டவட்டமான குறிக்கோளுடன் அவரது உறுதியான நம்பிக்கையும் சேர்ந்து, ஏற்படுத்திய அதிர்வலையை உடனே ஏற்றுக் கொண்ட அவள் ஆழ் மனம் அதற்கான வெற்றிப் பாதையை உருவாக்கித் தந்தது.


நம்பிக்கை மட்டுமல்ல. நினைத்ததை அடைவதற்கு அதறகு ஈடான விலையை தந்தாக வேண்டும் என்பதை தெரிந்திருந்தார் கல்பனா. ஆம். அவர் தந்த விலை. அதற்கான தொழில் நுட்ப அறிவினை பெறுவதற்கான அவரது அயராத உழைப்பு.அது வெறும் கனவாக மட்டுமல்ல. அவள் பேச்சில், மூச்சில், எண்ணத்தில், எல்லாமுமாக நிறைந்திருந்தது.


அவர் 1982 ஆம் ஆண்டு, வானூர்தி பொறியியலில் சந்திகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் தனது இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார்.

அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளி பொறியியலில் முதுகலைப்பட்டம் 1984 ஆம் ஆண்டு பெற்றதோடு பௌல்தேரில் உள்ள கோலோரடோ பல்கலைகழகத்தில் 1986 ல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன் விண்வெளி பொறியியலில் 1988 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


NASA- வில் “கல்பனா"



அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ஒருவர். “கல்பனா! NASA- வில் அமெரிக்கர்களை மட்டும்தான் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். உன்னைப் போன்ற வெளிநாட்டுக்காரர்களை அவர்கள் தேர்வு செய்யமாட்டார்கள்” என்று சொன்னார். அதற்கு “இல்லையில்லை! எனக்கு திறமை இருக்கிறது. போதுமான தகுதியும் இருக்கிறது. அதனால் நாசாவில் நான் இடம் பிடிப்பேன்” என்று நம்பிக்கையோடு சொன்னார் கல்பனா.


ஆனால் அந்த முயற்சியில் முதல் முறை அவருக்குத் தோல்வியே கிடைத்தது. இருப்பினும் விடாமுயறசியோடு தன் அறிவை மேலும் வளர்த்துக் கொண்டு அடுத்த முறைவெற்றி பெற்றார்.

தோல்வியைத் தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தாலும் வெற்றி நிச்சயம் என்ற வெற்றி சித்தாந்தத்தை நிரூபித்தார்

கல்பனா மார்ச் 1995 ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1998 ல் அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87ல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பெர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார்.

1984 ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியை சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார்.

பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் ஒசெர்செட் மேதொட்ஸ் இனக்ல் துணைத்தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா வ்/ஸ்த்தோல் ல்[2] க்ஃப்ட் ஆராய்ச்சி செய்தார்.

விமானம் மற்றும் கிளைடேர்களை ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச்ச்சன்ற்தழ் பெற்ற தோடு அவர், ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் க்ளைடர்களையும் ஓட்ட அனுமதி பெற்றிருந்தார். ஃப்க் க்ட்5ஏசி என்ற அடையாளத்துடன் தரும் டெக்னிசியன் கிளாஸ் அமெச்சூர் ரேடியோ அனுமதியும் பெற்றிருந்தார்.

2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107ல் பயணிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப் பட்ட தொழில் நுட்ப கோளாறுகளால் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர்.

ஜனவரி 16, 2003 ல் சாவ்லா மீண்டும் கொலம்பியாவிலிருந்து கொலம்பிய விண்கல விபரீதம் (STS-107 ல்){/1 விண்வெளி திரும்பினார். இந்தப்பயணத்தில் சாவ்லாவின் பொறுப்புகள் (SPACEHAB/BALLE-BALLE/FREESTAR ) மைகிரோ கிராவிட்டி சோதனைகளாக இருந்தன.இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகள் மேற்கொண்டனர். இதில் விண்வெளி வீரர்களின் உடல்நிளைப்பற்றியும் அவரது பாதுகாப்பு பற்றியும், விண்வெளி தொழில் நுட்ப மேம்பட்டு வளரவும் பல சோதனைகள் புரிந்தனர்.

2003 கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்புகையில் புவி வளிமண்டலத்தினுள் வெடித்துச் சிதறியதில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.


பிறப்பு : March 17, 1962
இறப்பு : February 1, 2003 (aged 40)







Wednesday, August 26, 2009

தெரிந்து கொள்ளுங்கள் !!!

உப்பு தண்ணீர் அதிகம் உள்ள கடல் செங்கடல். உப்பு குறைவாக உள்ள கடல் துருவப் பகுதி கடல்.
கருங்கடல் ஐரோப்பாவில் உள்ளது.
மேகங்கள் பத்து வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலக அன்னையர் தினம் மே 10ம் தேதி கொண்டாப்படுகிறது.
உலக செஞ்சிலுவை சங்க தினம் மே 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சீனாவின் தேசிய மலர் திராட்சை மலர்.
பார்லி பூ மூன்று நிமிடங்கள் மட்டுமே பூத்திருந்து உடனே வாடி விடும்.
தேர்தலில் முதன் முதலாக சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி
பெற்றவர் முத்துலட்சுமி ரெட்டி.
விலாங்கு மீன் நாயை விட பல மடங்கு மோப்ப சக்தி கொண்டது.



நல்ல பயனுள்ள தகவல்கள்

ருமேனியா நாட்டின் தேசிய மலர் பூவரசம் பூ.

டென்மார்க் நாட்டின் தேசியப் பறவை வானம்பாடி.

ராஜஸ்தான் மாநிலத்தில் கழுதைப் பந்தயம் நடத்தப்படுகிறது.

குதிக்கத் தெரியாத மிருகம் யானை.

உலகில் முதன் முதலில் காற்றாடி இயந்திரம் உருவாக்கி உபயோகப்படுத்தப்பட்டது ஐரோப்பாவில் தான்.

கைக் கடிகாரத்தை முதன் முதலில் உபயோகித்தவர் ராணி எலிசபெத்.

இந்தியாவில் எழுதப் பட்ட முதல் ஆங்கில நாவல் ராஜ்மோகனின் மனைவி என்ற நாவல் தான். இதை 1870ம் ஆண்டு பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதினார்.

இந்தியாவின் முதல் அரசுத் தரப்பு வக்கில் எஸ்.சுப்ரமணிய ஐயர் என்பவர் தான். இவர் 1887ல் மெட்ராஸ் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.

உலகில் முதன்முதலில் தேர்வு முறையை அறிமுகப்படுத்திய நாடு சீனா.

ஸ்டாலின் சீனிவாசன் என்பவரால் 1930ம் ஆண்டு மணிக்கொடி என்ற தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.

மூட்டைப் பூச்சியில் 20000 வகைகள் உண்டு. இவற்றில் சில தாவரச் சத்தையும், சில ரத்தத்தையும் உறிஞ்சி வாழும்.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 10ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுகிறது.

லெமுரியாக் கண்டம் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கே இருந்து கடலில்
மறைந்து போன நிலப்பரப்பு. லெமு என்பது தேவாங்கைக் குறிக்கும். அங்கு தேவாங்குகள் அதிகம் இருந்தமையால் அந்நிலப்பரப்புக்கு இப்பெயர் இடப்பட்டது.

சர்வதேச ஒரு நாள் போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த ஓரே வீரர் தென்னாப்ரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ்.

டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் ஹாட்-ரிக் விக்கெட் எடுத்த வீரர் இந்தியாவின் இர்ஃபான் பதான்.

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நாடு இந்தியா.

அணுசக்தியின் மூலம் ஓடும் முதல் கப்பலை அமெரிக்காதான் தயாரித்தது.

உலகில் முதன்முதலில் மின்சார ரயில் ஜெர்மனியில் 1881ம் ஆண்டு இயக்கப்பட்டது.

நடமாடும் தபால் நிலையங்களை முதலில் அறிமுகம் செய்து வைத்த நாடு பிரிட்டன்.

அமேசான் ஆறு

அமேசான் ஆறு தென் அமெரிக்ககண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சேஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம்.

இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.

அமேசான் ஆறு அட்லாண்டிக் பெருங்கடலில்கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அமேசான் ஆறு

அமேசான் ஆறு தென் அமெரிக்ககண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சேஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம்.


இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும்.


அமேசான் ஆறு அட்லாண்டிக் பெருங்கடலில்கலக்கும் பொழுது, நொடிக்கு 300,000 கன மீட்டர் நன்னீரைக் கொண்டு சேர்க்கின்றது.

இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

Thursday, August 20, 2009

நட்பு

உன் காதலை விட
நட்புக்கு மரியாதை செலுத்து
இந்த நட்பு உன்னோடு இருக்கும்...
காதல் உன்னை விட்டு போக
விரும்பும்....
ஏமாந்துவிடாதே!!!!!!!!